Thursday, March 27, 2014

தெஹிவல விளையாட்டரங்குக்கு நவீன வசதிகளுடன் புனரமைப்பு!

தெஹிவல விளையாட்டரங்குக்கு நவீன வசதிகளுடன் புனரமைப்பு!





தெஹிவலயில் உள்ள விளையாட்டரங்கு நவீன வசதிகள் கொண்டதாக புனரமைக்கப்படவுள்ளது. புனரமைப்பு பணிகளுக்கான அத்திவாரக் கல்லை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பாராளுமண்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் நேற்று நட்டினர்.

தெஹிவல - கல்கிஸ்ஸை நகரசபையின் பிரதேச அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் இந்த விளையாட்டரங்கின் முதற்கட்ட புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக 150 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

பூப்பந்து விளையாட்டுக்கான வசதி, நீச்சல் தடாகம், மலசலகூட வசதி இருக்கைகள், நடைபாதை மற்றும் உடற்பயிற்சிக்கான சாதனங்கள் போன்ற பல்வேறு வசதிகளையும் கொண்டதாக இந்த விளையாட்டரங்கு நவீன மயப்படுத்தப்படவுள்ளது.

அடிக்கல் நடும் வைபவத்தில் அமைச்சர் மொஹான் லால் கிரேறு, தெஹிவல-கல்கிஸ்ஸை மாநகரசபை முதல்வர் தனசிரி அமரதுங்க, நகராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச ஊழியர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment