Saturday, June 14, 2014

'ஸ்கை டைவ்' அடித்தார் ஜோர்ஜ் புஷ்!

'ஸ்கை டைவ்' அடித்தார் ஜோர்ஜ் புஷ்!






அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் இன்னும் உற்சாகமாகவே இருக்கிறார். தனது 90ஆவது பிறந்தநாளை, ஸ்கை டைவ் அடித்து உற்சாகமாக கொண்டாடினார்.

ஹெலிகாப்டரில் இருந்து குதித்த புஷ், வானில் மிதந்தவாறு தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்.

அமெரிக்காவின் கென்னிபன்க்போர்ட் விமானப்படை தளத்தில், முன்னாள் ராணுவ வீரர்களின் இந்த சாகசச் செயலுக்கு உதவி புரிந்தனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

பெரியகல்லாறில் திவிநெகும வங்கி திறந்துவைப்பு!

பெரியகல்லாறில் திவிநெகும வங்கி திறந்துவைப்பு!





மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் அமைக்கப்பட்ட திவிநெகும வங்கி நேற்று  (13)  திறந்துவைக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட சமுர்த்தி திணைக்கள உதவி பணிப்பாளர் குணரெட்னம்இமீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிராம மட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தினையும் வாழ்க்கை தரத்தினையும் உயர்த்தும் வகையில் திவிநெகு திணைக்களம் ஊடாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் திவிநெகும வங்கிகள் ஊடாக இலகுகடன்களை வழங்குவதன் மூலம் வறுமை அற்ற இலங்கையினை கட்டியெழுப்பும் மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் குறிக்கோள் அடையப்படும்.

இந்த சமூர்த்தி வங்கி மூலம் கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு, துறைநீலாவனை ஆகிய பகுதிகளைச்சேர்ந்த சுமார் 2500 குடும்பங்கள் நன்மையடையவுள்ளதாக களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 25 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த வங்கி அமைக்கப்பட்டுள்ளது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்


ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு!

ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு!






ஜி77 நாடுகளின் 50ஆவது அரச தலைவர்களது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  பொலிவியா சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொலிவியாவின் விரு விரு சர்வதேச விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

பொலிவியா செனட் தலைவர் யூஜின் ரொஜாஸ் ஜனாதிபதியை வரவேற்றார். ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பும் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் ஒன்றுணைந்து ஜி77 அரச தலைவர்களது மாநாட்டை பொலிவியாவில் நடத்துகின்றன.

இன்றும் நாளையும்  இடம்பெறவுள்ள இம்மாநாட்டில்
இந்தியா, சீனா உள்ளிட்ட 133 நாடுகளின் அரச தலைவர்கள் பங்குகொள்கின்றனர்.

இம்மாநாட்டில்  நாளை  ஜனாதிபதி  உரையாற்ற உள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கும், ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கும் இந்த மாநாட்டில் வைத்து பொலிவியாவின் உயர் அரச விருது ஒன்று வழங்கப்படவுள்ளது.

சமாதானத்துக்கும், ஜனநாயகத்துக்கும் வழங்கிய பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

Monday, April 14, 2014

சட்டவிரோதமான முறையில் கடல்வாழ் உயிரினங்களை எடுத்துச் சென்ற ஐந்து சீன பிரசைகள் கைது!

சட்டவிரோதமான முறையில் கடல்வாழ் உயிரினங்களை எடுத்துச் சென்ற ஐந்து சீன பிரசைகள் கைது!




இலங்கை::சட்டவிரோதமான முறையில் கடல்வாழ் உயிரினங்களை எடுத்துச் சென்ற ஐந்து சீன பிரசைகள், கொள்ளுப்பிட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வான் மூலம் இவற்றை எடுத்துச் சென்ற வேளையில், கொள்ளுப்பிட்டியில் வீதி கடமையில் ஈடுபட்டிருந்தவர்களால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த சீன பிரசைகளிடம் இருந்து உலர்த்தப்பட்ட 92 கடல் குதிரைகள், 90 கடல் அட்டைகள், 24 கடல் நத்தைகள், 70 சிப்பிகள் மற்றும் முருங்கை கல் பாறைகளின் பகுதிகள் எனபன கைப்பற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களுடன் அரசு பேச்சு!

மோடி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களுடன் அரசு பேச்சு!



நரேந்திர மோடி உள்ளிட்ட இந்தியாவின் எல்லா பிரதான தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் இலங்கை அரசாங்கம் தீவிரமான பேச்சுக்களை நடத்தி வருவதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இது பற்றி அமைச்சர் மேலும் கூறியதாவது-
இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் என்று நம்பப்படும் நரேந்திர மோடியுடன் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்திக் கொண்டிருக்கிறது.

இலங்கை விவகாரத்தில் நரேந்திரமோடி வேறுபட்ட அணுகுமுறையை கடைப்பிடிப்பார் என்று கூறப்படுகின்ற நிலையில், இலங்கை அரசாங்கம் அங்கு மாறி வரும் சூழ்நிலைகளை இலங்கை அறிந்தே வைத்துள்ளது.
நாம் நரேந்திரமோடியுடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளோம். இந்தியத் தேர்தலின் முன்னேற்றங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். இந்தியத் தேர்தலில் போட்டியிடும் எல்லா பிரதான கட்சிகளுடனும் நாம் தீவிரமான பேச்சுக்களை நடத்தி வருகிறோம்.

அவர்கள் எமது அயலவர்கள். அவர்களுடனான பேச்சுக்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

நடிகர் ரஜினிகாந்தை மோடி இன்று சந்தித்துப் பேசினார்!

நடிகர் ரஜினிகாந்தை மோடி இன்று சந்தித்துப் பேசினார்!



தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னை வந்த பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார்.

சென்னை - போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் இன்று (13) மாலை 6.35 மணிக்கு இந்தச் சந்திப்பு நடந்தது.
இந்தச் சந்திப்பில் ரஜினியும் மோடியும் என்ன பேசினார்கள் என்ற  விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.எனினும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, ரஜினிக்கு மோடி வாழ்த்து தெரிவிக்க நேரில் சந்திதத்தாக பாஜகவினர் கூறினர்.
ரஜினியின் இல்லத்துக்குச் சென்று திரும்புவதற்குள், ரஜினி உடனான சந்திப்பின் புகைப்படப் பதிவு உடனடியாக மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டது.

'ரஜினி உடன்' என்று பதிவிடப்பட்ட மோடியின் அந்த ட்வீட், சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

ஜனாதிபதிக்கு பிரதமர் வாழ்த்து!

ஜனாதிபதிக்கு பிரதமர் வாழ்த்து!




பிரதமர் தி.மு ஜயரட்ண தமது குடும்பத்தாருடன்  தங்காலையிலுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கால்டன் இல்லத்துக்கு  இன்று விஜயம் செய்து ஜனாதிபதியின் குடும்பத்தினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கலாசார முறைப்படி தெரிவித்து கொண்டார்.

ஜனாதிபதியின் பாரியான் ஷிரந்தி ராஜபக்ஷ.மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் பிரதமர் குடும்பத்தினரை வரவேற்று வாழ்த்துக்களை பரஸ்பரம் பரிமாறிக்கெண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

வெல்லமுல்லிவாய்க்காலில் புத்தாண்டுக் கொண்டாட்டம்!

வெல்லமுல்லிவாய்க்காலில் புத்தாண்டுக் கொண்டாட்டம்!





சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெல்லமுல்லிவாய்க்கால் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுக்காக புத்தாண்டுக் கொண்டாட்ட விழா ஒன்றை அண்மையில் இலங்கை இராணுவத்தின் 68 ஆவது படைப் பிரிவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பல்வேறு சம்பிரதாய பூர்வ சமூக விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் சிறுவர்களும் இளைஞர் யுவதிகளும் போட்டிகளில் மிகவும் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். இதன் போது இப்பிராந்தியத்தை சேர்ந்த 3000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படன.இந் நிகழ்வில் இராணுவ உயரதிகாரிகள் மற்றும் பெரும்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்

தென்கிழக்கு பல்கலைக்கழக நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்பார்!

தென்கிழக்கு பல்கலைக்கழக நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்பார்!



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள பல்வேறுபட்ட அங்குராப்பன நிகழ்வுகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ கலந்துகொள்ளவுள்ளார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்தையும் வர்த்தக முகாமைத்துவ பீடத்துக்கான கட்டிடத் தொகுதியையும் ஜனாதிபதி திறந்துவைப்பார்.

அத்துடன்  ஒலுவில் வளாகத்திலும் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திலும் மாணவர் விடுதிக்கான அடிக்கல்லையும் நடுவார்.

ஜனாதிபதியுடன் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க, அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும்  உள்ளூர் பிரமுகர்களும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த வைபவங்கள் சம்மந்தமாக உள்ளூர் பத்திரிகையாளர்களை தெளிவுபடுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு, நேற்று தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.எம்.அப்துல் சத்தார், கலை கலாச்சார பீடாதிபதி எம்.அப்துல் ஜப்பார், விரிவுரையாளர் எம்.ஏ.எம்.சமீம், சிரேஷ்ட விரிவுரையாளர் கே.எம்.முபாரக், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.எச்.நபார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் குமார் சங்ககார?

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் குமார் சங்ககார?




இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் வீரர்களுக்கு அண்மையில் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட வரவேற்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சங்ககார உரையாற்றி கொண்டிருந்த போது, சங்ககார, பாராளுமன்றத்திற்கு வரும் காலம் கனிந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க கூறியுள்ளார்.

இதன் போது கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட சங்ககார சிறந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினரின் இந்த கருத்துக்களுக்கு எந்த பதிலையும் வழங்காத சங்ககார சிரித்ததாக கூறப்படுகிறது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

வடக்கில் புதிய கட்சி ஒன்று அங்குரார்ப்பணம்!

வடக்கில் புதிய கட்சி ஒன்று அங்குரார்ப்பணம்!



பல்வேறு மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பின்னர் ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் விஜயகாந்த் முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அங்குரார்ப்பணம் செய்து ள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியிலுள்ள சுவர்க்கா விருந்தினர் விடுதியில் இன்று நண்பகல் நடைபெற்ற நிகழ்வில் புதிய கட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைத்து அவர் உரையாற்றினார்.
அவர் தனது உரையில் - "இங்குள்ள கட்சிகள் ஒன்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றியோ தேசியம் பற்றியோ சிந்திப்பதில்லை. தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளைப் பெறும் நோக்கிலேயே அரசியல்வாதிகள் மக்களைத் தேடி வருகின்றனர். "இந்த நிலையில், மக்களின் கல்வி, கலாசாரம், பண்பாட்டை கட்டி எழுப்பும் நோக்கிலேயே தனது கட்சி அங்குராட்பணம் செய்யப்படுகிறது" - எனத் தெரிவித்தார்.

விஜயகாந்த் குற்றச்செயல் ஒன்றில் தொடர்புபட்டார் எனத் தெரிவித்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ள நிலையில் பிணையில் வெளிவந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

வடக்கு கிழக்கு மக்களுக்கு மனநல ஆலோசனை!

வடக்கு கிழக்கு மக்களுக்கு மனநல ஆலோசனை!


யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு விரைவில் மன நல ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டோருக்கு மனநல ஆலோசனைகளை வழங்குவது மிகவும் அவசியமானது என ஜனதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

யுத்த வலய மக்கள் எதிர்நோக்கக் கூடிய உளவியல் பிரச்சினைகள் மற்றும் ஏனைய அழுத்தங்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமூக சேவைகள், மகளிர் விவகாரம், சுகாதாரம் போன்ற பல்வேறு அமைச்சுக்களினால் இந்த ஆலோசனை சேவைகள் வழங்கப்படும்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எவ்வாறான ஓர் பொறிமுறைமையின் கீழ் மன நல ஆலோசனைகளை வழங்குவது என்பது குறித்து அண்மையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்