Saturday, June 14, 2014

'ஸ்கை டைவ்' அடித்தார் ஜோர்ஜ் புஷ்!

'ஸ்கை டைவ்' அடித்தார் ஜோர்ஜ் புஷ்!






அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் இன்னும் உற்சாகமாகவே இருக்கிறார். தனது 90ஆவது பிறந்தநாளை, ஸ்கை டைவ் அடித்து உற்சாகமாக கொண்டாடினார்.

ஹெலிகாப்டரில் இருந்து குதித்த புஷ், வானில் மிதந்தவாறு தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்.

அமெரிக்காவின் கென்னிபன்க்போர்ட் விமானப்படை தளத்தில், முன்னாள் ராணுவ வீரர்களின் இந்த சாகசச் செயலுக்கு உதவி புரிந்தனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

பெரியகல்லாறில் திவிநெகும வங்கி திறந்துவைப்பு!

பெரியகல்லாறில் திவிநெகும வங்கி திறந்துவைப்பு!





மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் அமைக்கப்பட்ட திவிநெகும வங்கி நேற்று  (13)  திறந்துவைக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட சமுர்த்தி திணைக்கள உதவி பணிப்பாளர் குணரெட்னம்இமீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிராம மட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தினையும் வாழ்க்கை தரத்தினையும் உயர்த்தும் வகையில் திவிநெகு திணைக்களம் ஊடாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் திவிநெகும வங்கிகள் ஊடாக இலகுகடன்களை வழங்குவதன் மூலம் வறுமை அற்ற இலங்கையினை கட்டியெழுப்பும் மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் குறிக்கோள் அடையப்படும்.

இந்த சமூர்த்தி வங்கி மூலம் கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு, துறைநீலாவனை ஆகிய பகுதிகளைச்சேர்ந்த சுமார் 2500 குடும்பங்கள் நன்மையடையவுள்ளதாக களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 25 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த வங்கி அமைக்கப்பட்டுள்ளது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்


ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு!

ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு!






ஜி77 நாடுகளின் 50ஆவது அரச தலைவர்களது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  பொலிவியா சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொலிவியாவின் விரு விரு சர்வதேச விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

பொலிவியா செனட் தலைவர் யூஜின் ரொஜாஸ் ஜனாதிபதியை வரவேற்றார். ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பும் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் ஒன்றுணைந்து ஜி77 அரச தலைவர்களது மாநாட்டை பொலிவியாவில் நடத்துகின்றன.

இன்றும் நாளையும்  இடம்பெறவுள்ள இம்மாநாட்டில்
இந்தியா, சீனா உள்ளிட்ட 133 நாடுகளின் அரச தலைவர்கள் பங்குகொள்கின்றனர்.

இம்மாநாட்டில்  நாளை  ஜனாதிபதி  உரையாற்ற உள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கும், ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கும் இந்த மாநாட்டில் வைத்து பொலிவியாவின் உயர் அரச விருது ஒன்று வழங்கப்படவுள்ளது.

சமாதானத்துக்கும், ஜனநாயகத்துக்கும் வழங்கிய பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்