கிண்ணியா தி/வான்-எல புஹாரி மகாவித்தியாலயத்துக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றையும், பாடசாலைக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்துவதற்காக ஐம்தாயிரம் ரூபா பெறுமதியான காசோலையினையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அன்பளிப்பாக வழங்கினார்.
இந்த மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுபோட்டி
பாடசாலை அதிபர் ஏ.எம்.முளவ்பர் தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றபோதே, பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இந்த அன்பளிப்பை வழங்கினார். விஷேட அதிதியாக கிண்ணியா வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேஹு அலி கலந்து கொண்டார்.
அல்-இல்மா, அந்-நூகா, அல்-ஹிக்மா ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் அந்-நுஹா இல்லம் சம்பியனாகியது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment