இரண்டாவது முறையாகவும் பேச்சுவார்த்தை ரத்து!
இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இரண்டாவது முறையாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் நரேந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரையும் விடுவித்தால் மாத்திரமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நிபந்தனை விதித்திருந்தார். எனினும் மீவர்கள் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை.
நீதிமன்றத்தின் உத்தரவின்படியே மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள். தமிழகத்தின் அழுத்தங்களுக்காக விடுவிக்கப்படமாட்டார்கள் என்று மீன்பிடித்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment