Thursday, March 27, 2014

ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி பள்ளிவாசலில் விசேட சமய நிகழ்ச்சிகள்!

ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி பள்ளிவாசலில் விசேட சமய நிகழ்ச்சிகள்!





தாய்நாட்டுக்கு எதிரான அனைத்து சவால்களையும் வெற்றி கொள்வதற்கு ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி, மாத்தறை கொடப்பிட்டிய ஜும்ஆ பள்ளிவாசலில் விசேட சமய நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த சமய நிகழ்வில், இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும உட்பட பெருந்திரளானோர் கலந்துக் கொண்டனர்.

மௌலவி என்.ஆர்.அஷ்ரப் இங்கு சமய நிகழ்ச்சிகளை நடத்தி வைத்தார். பள்ளிவாசல் விசேட சமய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட ஜனாதிபதி, அங்கு குழுமியிருந்த மக்களுடனும் ,சிறுவர் சிறுமிகளுடனும்  மிகவும் சினேகபூர்வமாக கலந்துரையாடினார்.

தாய்நாட்டுக்கெதிராக வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளை தோற்கடிக்கச்செய்து அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழவும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தங்கு தடையின்றி மேற்கொள்ளவும் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் ஆசி வேண்டியே இந்த விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment