இவ்வருடம் மே மாதத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாடு தொடர்பான தகவலை 40 நாட்களுக்குள் 18 நாடுகளில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு உத்தியோகபூர்வமாக எடுத்துச் செல்லும் முயற்சியை இலங்கை இளைஞர் சம்மேளனம் ஆரம்பித்துள்ளது.
சம்மேளனத்தின் பிரதம செயலாளர் சமன் குமார தலைமையில் ஐவர் கொண்ட குழுவொன்று இதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளனர்.
இக்குழுவினர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள அவரது கால்டன் இல்லத்தில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.
இலங்கையின் புகழை உலக நாடுகளுக்கு எடுத்துக் கூறுங்கள் என்று வாழ்த்திய ஜனாதிபதி இலங்கையின் தேசிய கொடியை அக்குழுவினரிடம் கையளித்தார்.
உலக இளைஞர் சம்மேளனத்தின் செயற்குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டளஸ் அழகப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment