Thursday, March 27, 2014

பறவைகளின் இனப்பெருக்கம் மற்றும் ஆய்வு மத்திய நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

பறவைகளின் இனப்பெருக்கம் மற்றும் ஆய்வு மத்திய நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!








அம்பாந்தோட்டை நாகரவெவ பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பறவை இனங்களின் இனப் பெருக்கம் மற்றும் ஆய்வு மத்திய நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்துவைத்தார்.

38 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மத்திய நிலையத்தில் உலகில் உள்ள அரிய வகை பறவைகளையும் அழிந்துபோகும் நிலையில் உள்ள பறவையினங்களையும் பராமரிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பறவையினங்கள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளும் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது ஆய்வுகளை இந்த மத்திய நிலையத்தில் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திறப்புவிழாவில் பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment