ஜெனீவாவில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையர் பிரிட்டன் பிரதமரின் அலுவலகத்துக்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரும் எண்ணிக்கையான இலங்கையர்கள் இலங்கையின் தேசிய கொடியை ஏந்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
“இலங்கையில் தற்சமயம் அமைதி நிலவுகிறது. மீண்டும் பீதியை ஏற்படுத்தாதீர்கள்!” என்று எழுதப்பட்ட பாதாதைகளை ஏந்தியவாறே இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment