Monday, March 10, 2014

வெளிநாட்டுத் தூதுவர்களின் நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

வெளிநாட்டுத் தூதுவர்களின் நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!




இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட  உயர்ஸ்தானிகர் ஒருவரும் ஐந்து தூதுவர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (10) தங்களது நியமனக் கடிதங்களைக் கையளித்தனர்.

நைஜீரிய உயர்ஸ்தானிகர் எஸ்.யூ.அஹமட், ஆஸ்திரியா தூதுவர் பெர்னாட் வ்ரபெட்ஸ், ஸ்லோவேனியா தூதுவர் திருமதி.டராஜ்பவ்டாஸ் குரெட், பின்லாந்தின் தூதுவர் ரவூலி சுய்க்கானென், சுரினாமின் தூதுவர் திருமதி. ஆஷ்னா டபிள்யூ.ஆர்.கன்ஹாய், ஓமான் தூதுவர் அல் ஷெயிக் ஜும்மா பின் ஹம்டான் பின் ஹஸன் அல் மலிக் அல் ஷெஹி ஆகியோரே தங்களது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் உயர் அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment