சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் மாலைதீவு உயர் ஸ்தானிகர் ஹுசைன் சிஹாப் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து பிரியாவிடை பெற்றார்.
தமது சேவைக் காலத்தில் ஜனாதிபதி வழங்கிய ஒத்துழைப்புக்கு மாலைதீவு உயர் ஸ்தானிகர் நன்றி தெரிவித்தார். ஹுசைன் சிஹாபின் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகள் மேலும் பலமடைந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment