Wednesday, March 12, 2014

தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு கிழக்கில் பேரணி, வீதி நாடகம்!

தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு கிழக்கில் பேரணி, வீதி நாடகம்!





தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு போதையற்ற சமூகத்தினை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி மற்றும் வீதி நாடகங்களை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களம் நடாத்தியது.

இன்று காலை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார காரியாலய வளவில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்;.சதுர்முகம் தலைமையில் இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்த விழிப்புணர்வு பேரணியில் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் கே.முருகானந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்கள அதிகாரிகள், தாதியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மதுபோதையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கையேடுகள் விநியோகிக்கப்பட்டதுடன் மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகில் விழிப்புணர்வு வீதி நாடகமும் நடத்தப்பட்டது.

மதுபோதையினால் ஏற்படும் தீமை தொடர்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு வீதி நாடகத்தில்  இளம் கலைஞர்கள் பங்குகொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment