Thursday, January 23, 2014

இளம் எம்.பிக்கள் குழு பிரிட்டன் பயணம்!

இளம் எம்.பிக்கள் குழு பிரிட்டன் பயணம்!







பிரிட்டனிலுள்ள புலம் பெயர் இலங்கையர்களையும், அந்த நாட்டின் அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து தற்போதைய இலங்கையின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று இலங்கையில் இருந்து பயணமாகியுள்ளனர்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இணைப்பாளருமான ஹுனைஸ் பாருக்கும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளார். இவர்  விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்:

இலங்கை நிலைவரம் தொடர்பில் புலம் பெயர்தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை தெளிவுபடுத்தும் வகையில் நாம் பிரித்தானியாவுக்கு சென்று 10 தினங்கள் அங்கு தங்கியிருந்து அமைப்புக்கள், துறைசார்ந்தவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பல்வேறு பட்ட விளக்கங்களை வழங்கவுள்ளோம்.

இதன் மூலம் அங்கிருக்கின்ற புலம் பெயர்மக்கள் தெளிவினை பெறுவர் என எதிர்பார்க்கிறோம். இலங்கை தொடர்பில் அவர்களால்  முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கும் நாம் தகுந்த பதில் கூறுவோம்.



குறிப்பாக பிரிட்டிஷ் பாராளு மன்றத்திற்கும் சென்று அங்கிருக்கின்ற முக்கிய மக்கள் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவோம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரரூக் தெரிவித்தார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment