இலங்கை தொடர்பில் இரண்டு அறிக்கைககளை நவனீதம்பிள்ளை சமர்ப்பிப்பார்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இலங்கை தொடர்பில் மார்ச் மாதம் 26 ஆம் திகதி இரண்டு அறிக்கைககளை சமர்ப்பிக்க உள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25ஆம் அமர்வுகளிலும், ஆணையாளரின் ஆண்டறிக்கையிலும் இலங்கை விவகாரம் பற்றி குறிப்பிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஆணையாளரின் வருடாந்த அறிக்கையிலும் இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து அறிவிப்பார் எனக் குறிப்பிடப்படுகிறது.
அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பிலும் நவனீதம்பிள்ளை தமது அறிக்கைகளில் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment