Thursday, January 9, 2014

வடக்கில் புதிய இராணுவ முகாம்கள் பாதுகாப்பு செயலாளரால் திறந்துவைப்பு!




வடக்கில் புதிய இராணுவ முகாம்கள் பாதுகாப்பு செயலாளரால் திறந்துவைப்பு!



யாழ்ப்பாணத்திற்கு நேற்று காலை விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ வடக்கில்  புதிதாக அமைக்கப்பட்ட இராணுவ முகாம்களைத் திறந்து வைத்தார்.

நேற்றுக் காலை விசேட விமானம் மூலமாக பாதுகாப்புச் செயலர் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு இராணுவத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இராணுவத் தளங்களையும்  பார்வையிட்டார்.
9 வீதியின் மிருசுவில் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இராணுவத்தின் 52 ஆவது படைத் தலைமையகத்தையும் திறந்து வைத்தார். கிளிநொச்சி ஆதார வைத்தியசாலைக்கும் விஜயம் மேற்கொண்டார்.
இந்த நிகழ்வுகளில் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி, இராணுவத் தளபதி தயா ரட்ணாயக்க மற்றும் மாவட்ட இராணுவத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் உட்பட  இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment