Sunday, January 26, 2014

இலங்கையின் விசேட பிரதிநிதிகள் குழு இன்று இந்தியாவுக்கு பயணம்!

இலங்கையின் விசேட பிரதிநிதிகள் குழு இன்று இந்தியாவுக்கு பயணம்!


இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கையின் விசேட பிரதிநிதிகள் குழு இன்று இந்தியாவுக்கு செல்லவுள்ளது.

இந்த குழுவில்  கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டிஆரச்சி உட்பட 5 பேர் அங்கம் வகிக்கின்றர்.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார்.

இதனைத் தவிர யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், சிலாபம் மற்றும் தென் பகுதி மீனவர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 10 மீனவர்களும் இன்று இந்தியாவுக்கு பயணமாகவுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment