Friday, January 10, 2014

இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுடன் ஜனாதிபதி சினேகபூர்வ உரையாடல்!







இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இஸ்ரேல் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  தொழில் வாய்ப்புப் பெற்று இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களை நேற்று (09) சந்தித்து சினேகபூர்வமாக உரையாடினார்.

'லங்கா மிஷன்' அமைப்பினால் ஜெரூஸலத்தில் உள்ள வை.எம்.சி.ஏ. ஹோட்டலில் இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் 400 க்கும் அதிகமான இலங்கையர்கள் கலந்துகொண்டனர்.

அவர்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றியதோடு அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார். 7000 இலங்கையர்கள் இஸ்ரேலில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment