Wednesday, January 22, 2014

ஜெனீவா அமர்வுகளில் சீனா இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கும்!

ஜெனீவா அமர்வுகளில் சீனா இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கும்!



மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என இலங்கைக்கான சீனத்தூதுவர் வூ ஜியன்காவோ தெரிவித்துள்ளார்.



ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்க
ப்படுவதாகவும், எனினும் உள்ளக முரண்பாடுகளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார மாற்றங்களை சீனா வரவேற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீனா, இலங்கையின் நேச நாடு. அந்த நட்பு என்றென்னும் நிலைத்து நிற்கும். இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்


No comments:

Post a Comment