Friday, January 24, 2014

ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளின் குழந்தைகளுக்கு உயர் கல்விக்கான புலமைப்பரிசில்!


ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளின் குழந்தைகளுக்கு உயர் கல்விக்கான புலமைப்பரிசில்!



ஜனாதிபதியின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களின்  குழந்தைகளுக்கு உயர் கல்விக்கான புலமைப்பரிசில்கள் இன்று வழங்கப்பட்டன.

2013 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 10 குழந்தைகளுக்கே இந்த புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் மக்கள் வங்கியின் சேமிப்புக் கணக்குப் புத்தகமும் பாடசாலை உபகரணங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

இது தொடர்பான வைபவம் ஜனாதிபதி பாதுகாப்பு தலைமை அதிகாரி பிரிகேடியர் ரவிபிரிய தலைமையில் கோட்டை ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment