Sunday, January 26, 2014

மகளிருக்கான புதிய நீச்சல் தடாகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

மகளிருக்கான புதிய நீச்சல் தடாகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!






கேகாலை ஷாந்த ஜோசப் பெண்கள் வித்தியாலயத்தில் புதிய நீச்சல் தடாகம் ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்து வைத்தார்.

இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி உரையாற்றுகையில்:

நாட்டிலுள்ள மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த விஷேட வேலைத் திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. எதிர்காலத்தில் நாட்டில் ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் உருவாக்கப்படுவார்கள்.

உறுதியான இலக்கு, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பினாலேயே நாட்டில் சுதந்திரமும்  அபிவிருத்தியும் மலர்ந்துள்ளது.

உறுதியான இலக்கு, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு என்பவற்றை நடைமுறைப்படுத்தினால், அனைத்து சவால்களையும் ஜெயிக்க முடியும் எனவும் ஜனாதிபதி கூறினனார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment