Thursday, January 16, 2014

நுவரெலிய தைப் பொங்கல் விழாவில் ஜனாதிபதி!

நுவரெலிய தைப் பொங்கல் விழாவில் ஜனாதிபதி!





நுவரெலியாவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று(15) முற்பகல் நடைபெற்ற தைப்பொங்கல் விழா நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, மற்றும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவி்ல் கலந்துகொண்ட பொது மக்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றுகையில்,

நாட்டையும், எதிர்கால சந்ததியினரையும் பாதுகாப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

கிராமங்கள், நகரங்கள் மாத்திரமன்றி தோட்டப் பகுதிகளிலுள்ள மக்களுக்கும் நியாயம் பெற்றுக்கொடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.



அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடையேற்படுத்தி, நாட்டை பின்தள்ளுவதற்கு எதிர்கட்சிகள் முயற்சிக்கின்றன.



இதற்கு நாட்டிலுள்ள புத்திசாலித்தனமான மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்.  எதிர்க்கட்சிகளின் கொள்கைகளை இன்று மக்கள் நிராகரித்துள்ளனர்.



இனம் மற்றும் மதம் என்ற பேதமற்ற சிறந்ததொரு நாட்டில் அடுத்த தைப்பொங்கலை கொண்டாடுவதற்காக நல்ல சூழல் ஏற்பட்டும் என்றும்  ஜனாதிபதி   நம்பிக்கை தெரிவித்தார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment