Wednesday, January 8, 2014

ஸ்டீபன் ஜே. ரெப் இன்று வடக்குக்கு செல்கிறார்!

ஸ்டீபன் ஜே. ரெப் இன்று வடக்குக்கு செல்கிறார்!



இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப் இன்று (08) வடக்குக்கு சென்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்தில் சந்திக்கவுள்ளார்.

யுத்தக் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் எழும் மனித உரிமை பிரச்சினைகள் பற்றி அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்காக தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப் நியமிக்கப்பட்டுள்ளார்.



தூதுவர் ஸ்டீபன் ரெப் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அரசாங்க தரப்பு அலுவலர்களுடனும் அரசியல் தலைவர்களுடனும் சமூக செயற்பாட்டாளர்களுடனும் பேசுவார் என அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது. இவர் அமைச்சர் ஜி.எல்.பீரிஸை ஜனவரி 10ஆம் திகதி அல்லது 11ஆம் திகதியன்று சந்தித்துப் பேசுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment