மாலைதீவு ஜனாதிபதி அமைச்சர் ரிஷாட் சந்திப்பு!
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு வந்தடைந்த மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லாஹ் யாமீன், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து உரையாடினார்.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக செயற்பாடுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் வர்த்தக தொடர்பாடல் மீளாய்வு மற்றும் வர்த்தக ஆணைக்குழு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
மாலைத்தீவின் பொருளாதாரம் உள்ளிட்ட இன்னோரன்ன விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன் இலங்கையில் புதிய முதலீடுகள் பற்றியும் உல்லாச பயணத் துறைக்கான இன்னோரன்ன வசதிகள் மேம்பாடு பற்றியும் கருத்துப்பறிமாறப்பட்டன.
இந்த சந்திப்பின்போது அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை பிரதி அமைச்சர் லக்ஷ்மன் வசந்த பெரேரா, அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவர் பந்துல எகடகேயும் கலந்துகொண்டனர்.
எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment