அலரி மாளிகையில் அரச நத்தார் உற்சவம்!
வருடாந்தம் நடாத்தப்படும் அரச நத்தார் உற்சவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் அவர்களின் பங்களிப்புடன் நேற்று (19) அலரி மாளிகையில் நடைபெற்றது.
பிதா பெனடிக் ஜோஸப் நத்தார் ஆராதனைகளை நடத்தினார். தமிழ்,சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் நத்தார் பக்தி கீதங்கள் இசைக்கப்பட்டன.
ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பிரதமர் தி.மு. ஜயரத்ன ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment