ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலைக்கு ஜனாதிபதி விஜயம்!
ஹெந்தலையில் உள்ள தொழுநோய் வைத்தியசாலைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (20) விஜயம் செய்து அங்கு தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயளர்களிடம் சுகம் விசாரித்தார்.
அங்குள்ள சகல வார்டுகளுக்கும் சென்ற ஜனாதிபதி நோயாளர்களுடன் சினேகபூர்வமாக உரையாடியதோடு அவர்களுக்கு நத்தார் பரிசுகளும் வழங்கினார்.
நோயாளர்கள் நத்தார் கீதங்கள் இசைத்து ஜனாதிபதியை மகிழ்வித்தனர். அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா உட்பட பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment