தாக்கப்பட்ட பள்ளிவாசலை அமைச்சர் ரிசாத் பார்வையிட்டார்!
தெஹிவளையில் நேற்று (18) தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட மஸ்ஜிதுல் தாருஸ் ஸாபி பள்ளிவாசலுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் உடனடியாக விஜயம் செய்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார்.
இது தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.
இத்தாக்குதல் சம்பவத்தை நடத்தியவர்களை உடனடி கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்ததுடன் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியின் விஷேட கவனத்திற்கும் கொண்டுவந்தார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment