மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சி!
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று 10ஆம் திகதி கொழும்பில் புகைப்படக் கண்காட்சி ஒன்றை அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
பத்தரமுல்த தியத்த உயன பூங்காவில் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த புகைப்படக் கண்காட்சிக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாப ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இலங்கை முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்ககைகள் தொடர்பான விவரணத் திரைப்படங்களும் இக்கண்காட்சியின் இறுதி தினத்தில் காண்பிக்கப்படும்.
-எம். ஜே.எம், தாஜுதீன்
No comments:
Post a Comment