அமைச்சர் ரிசாதுக்கு தேரர் விஜித வல்பொல பட்டம் வழங்கி கௌரவம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இலங்கை கவி சங்கம்,மற்றும் அஸ்கிரி மஹாநாயக்கவின் பதிவாளரும், இச்சங்கத்தின் அதி நிக்காயக்க தேரர் விஜித வல்பொலவினால் தேசமான்ய தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டடார்.
இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு காலத்தில் பௌத்த மதகுரு ஒருவரினால் ஒரு முஸ்லிம் அமைச்சர் தமது சமூக அரசியல்,இன உறவு,புரிந்துணர்வு,சேவை மனப்பான்மை என்பவைகள் தொடர்பில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வைபவம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
ஜோர்தனை தலைமையகமாக கொண்ட ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட உலகில் 1.7 பில்லியன் முஸ்லிம்களுக்குள் அதி சிறந்த ஆளுமை,செல்வாக்கு செலுத்தும் 2013 2014 ஆம் ஆண்டுக்கான அரசியல் தலைவர்கள் வரிசையில் இலங்கையிலிருந்து அமைச்சர் றிஷாத் பதியுதீன் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment