Thursday, August 29, 2013

மேர்வின் சில்வா விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக் கெஹெலிய மறுப்பு!


மேர்வின் சில்வா விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக் கெஹெலிய மறுப்பு!



தகவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று (29) வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விடயம் சூடுபிடித்தது.

தான் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளரை மணந்து கொள்ள விரும்புவதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம்  சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

இக்கருத்து  தெடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி விளக்கம் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹெலிய- இது அவரது தனிப்பட்ட விடயம். அது பற்றி என்னால் கருத்துத் தெரிவிக்க முடியாது என்று கூறினார்.

உங்களது கண்டிப் பிரதேசத்தில் நாய்களுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என மற்றும் ஒரு ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சிரித்துக்கொண்டே பதிலலித்த அமைச்சர் அது பொலிஸ் தினைக்களத்தினால் நடாத்தப்பட் ஒரு நிகழ்வு. இது ஒரு சர்வதேச வேலைத்திட்டமாகும் என்று கூறினார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment