ஜனாதிபதி நாடு திரும்பினார்!
-எம்.ஜே.எம். தாஜுதீன்
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பெலாரஸ் நாட்டுக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (28) அதிகாலை நாடு திரும்பினார்.
பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன- மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் முக்கியஸ்தர்கள் விமாக நிலையம் சென்று ஜனாதிபதி குழுவினரை வரவேற்றனர்.
ஜனாதிபதியின் இந்த விஜயம் வெற்றிகரமாக அமைந்ததாகவும் பல துறைகளிலும் இலங்கைக்கு நன்மை பயக்கும் ஏழு உடன்படிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டதாகவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment