சகல இன மக்கள் மத்தியிலும் நல்லுறவை வளர்க்க கலந்துரையாடல்!
இலங்கையில் வாழும் சகல இனங்களுக்கும் இடையில் சமாதானம் - புரிந்துணர்வு மற்றும் அந்நியோன்ய நல்லுறவு என்பவற்றைக் கட்டிக்காக்கும் முயற்சிகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவைத் தலைவர் தாரிக் முகம்மத் - உப தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.எம். சுஹைர் ஆகியோர் உட்பட பல முஸ்லிம் கல்விமான்கள் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment