கடுவல நவீன பஸ் நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!
120 மில்லியன் ரூபா செலவில் கடுவல நகரில் மூன்று மாடிகளைக் கொண்டதாக புதிதாக அமைக்கப்பட்ட நவீன வசதிகள் கொண்ட பஸ் நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (25) திறந்துவைத்தார்.
இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த், தினேஷ் குணவர்தன, பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, கடுவல நகர முதல்வர் ஜீ.எச். புத்ததாச ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொணடனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment