மத்திய வங்கி நூதனசாலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு!
கொழும்பில் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய வங்கி நூதனசாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ நேற்று (11) திறந்துவைத்தார்.
கொழும்பு சத்தாம் வீதியில் 100 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த சென்ட்ரல் பொயின்ட் கட்டடம் புனரமைக்கப்பட்டு அதில் மத்திய வங்கியின் நூதனசாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடம் புலிகளின் தாக்குதலினால் மிகவும் மோசமான முறையில் சிதைவடைந்திருந்தது. பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளரின் பணிப்பின் பேரில் இக்கட்டடம் புனரமைக்கப்பட்டது.
பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை முன்னிட்டு மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 500 ரூபா நாணயத்தாள் இந்த வைபவத்தின்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment