காலியில் பொது நலவாய மக்கள் மன்றம்!
நேற்று மாலை காலியில் நடைபெற்ற பொது நலவாய மக்கள் மன்றத்தில் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அமைச்சர்களும் உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். பிரதமர் தி.மு. ஜயரத்ன வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாநாட்டை முன்னிட்டு காலி- ஹிக்கடுவை மற்றும் ஹம்பாந் தோட்டை நகரங்கள் விழாக்கோலம் பூண் டிருந்தன. விசேட போக் குவரத்து மற்றும் பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் 23 ஆவது உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக நேற்று (10)அம்பாந்தோட்டையிலும் ஹிக்கடுவையிலும் இரண்டு மாநாடுகள் நடைபெற்றன.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment