Wednesday, November 13, 2013

அரச தலைவர்கள் நாளை அம்பாந்தோட்டை பயணம்!

அரச தலைவர்கள் நாளை அம்பாந்தோட்டை பயணம்!



கொழும்பில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவபய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள அரச தலைவர்கள் நாளை அம்பாந்தோட்டை மற்றும் மரிஜ்ஜவிலவுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

கொழும்பில் இருந்து விசேட ஹெலிகொப்டர்கள் மூலம் அம்பாந்தோட்டை செல்லும் இவர்களுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு நகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அம்பாந்தோட்டையில்  இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ள வர்த்தக பிரமுகர்களின் வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொள்வர்.

அதனைத் தொடர்ந்த மாலை நான்கு மணிக்கு மிரிஜ்ஜவெல தாவரவியல் பூங்காவுக்கு விஜயம் செய்யும் தலைவர்கள் அங்கு மரம் நடுகை நிகழ்வில் கலந்துகொள்வர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment