Saturday, February 1, 2014

வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல் குறித்து நிஷா தேசாய் பிஸ்வால் கவலை!

வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல் குறித்து நிஷா தேசாய் பிஸ்வால் கவலை!




இலங்கையில் பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் என்பவற்றின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், எரியூட்டல் சம்பவங்கள் அதிகரித்திருப்பது பற்றி விசனம் தெரிவித்தர் ஐக்கிய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால்.

அவற்றைத் தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் எடுக்கப்படாதிருப்பதையிட்டு கவலையையும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் நேற்று  நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது அமைச்சில் பிற்பகல் சந்தித்து கலந்துரையாடினார்.

திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் அடுல் கெஷாப் மற்றும் அவர்களது குழுவினர், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே.சிஸன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் போதே அவர் வணக்கஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்தார்.
நாட்டின் குற்றவியல் சட்டம் தொடர்பாகவும், விரைவில் அமைச்சர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள புதிய சட்டங்கள் மற்றும் சட்ட திருத்தங்கள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் பரவலாக கலந்துரையாடப்பட்டது.

மூன்று தசாப்தகால யுத்தத்தின் விளைவாக வடகிழக்கு மாகாணங்களில் பெரும்பாலும் செயலிழந்திருந்த நீதிமன்றங்கள் மீண்டும் செயல்பட்டு வருவதாகவும், அண்மையில் சகல வசதிகளுடனும் கூடிய புதிய மூன்று நீதிமன்றக் கட்டடத் தொகுதிகள் வட மாகாணத்தில் திறந்து வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment