இராணுவ புலனாய்வுக்கான தலைமையகம் திறந்துவைப்பு!
கரந்தெனியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவப் புலனாய்வுப்பிரிவின் தலைமையகத்தை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று திறந்துவைத்தார்.
இது தொடர்பான வைபவம் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக தலைமையில் நடைபெற்றது.
தாய்நாட்டுக்காக தம்மை தியாகம் செய்த 8 புலனாய்வுப்பிரிவு இராணுவ அதிகாரிகள் மற்றும் 56 படை வீரர்களை நினைவு கூறுமுகமாக அமைக்கப்பட்டுள்ள “யுத்த வீரர்” நினைவுத் தூபியையும் செயலாளர் திறந்துவைத்தார்.
புலனாய்வுப்பிரிவு 1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் திகதி உருவாக்கப்பட்டதாகும். இதன் முதலாவது படையணி கொழும்பு முத்தையா வீதியில் ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment