Saturday, February 1, 2014

இந்தியா கைவிரி்த்துவிட்டது!


இந்தியா கைவிரி்த்துவிட்டது!




ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிக்க எந்த வகையிலும் உதவ முடியாது என்று இந்தியா கைவிரித்து விட்டதாக எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதாலேயே, தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்த விரும்பாத இந்திய மத்திய அரசு இலங்கைக்கு உதவ மறுத்துள்ளது.

கடந்த புதன்கிழமை புதுடெல்லியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தில், அனைத்துலக விசாரணை கோரப்படாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் உதவ வேண்டும் என்று அமைச்சர் பீரிஸ் கோரியிருந்தார் என்று இந்திய வெளிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் மனோநிலையில் இருந்த சல்மான் குர்ஷித், இதற்கு எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேவேளை, வாஷிங்டனுடனேயே இதுபற்றி நேரடியாகப் பேசிக் கொள்ளுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு சல்மான் குர்ஷித் ஆலோசனை கூறியுள்ளார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment