இலங்கையின் 66 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமன்னிப்பின் கீழ், நாளை 1,200 கைதிகளை விடுதலை செய்யவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சிறு குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளே விடுதலை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.
அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கடன் முறையில் சிறியளவிலான நிதியுதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்தது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment