Monday, April 14, 2014

சட்டவிரோதமான முறையில் கடல்வாழ் உயிரினங்களை எடுத்துச் சென்ற ஐந்து சீன பிரசைகள் கைது!

சட்டவிரோதமான முறையில் கடல்வாழ் உயிரினங்களை எடுத்துச் சென்ற ஐந்து சீன பிரசைகள் கைது!




இலங்கை::சட்டவிரோதமான முறையில் கடல்வாழ் உயிரினங்களை எடுத்துச் சென்ற ஐந்து சீன பிரசைகள், கொள்ளுப்பிட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வான் மூலம் இவற்றை எடுத்துச் சென்ற வேளையில், கொள்ளுப்பிட்டியில் வீதி கடமையில் ஈடுபட்டிருந்தவர்களால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த சீன பிரசைகளிடம் இருந்து உலர்த்தப்பட்ட 92 கடல் குதிரைகள், 90 கடல் அட்டைகள், 24 கடல் நத்தைகள், 70 சிப்பிகள் மற்றும் முருங்கை கல் பாறைகளின் பகுதிகள் எனபன கைப்பற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment