Monday, April 14, 2014

தென்கிழக்கு பல்கலைக்கழக நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்பார்!

தென்கிழக்கு பல்கலைக்கழக நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்பார்!



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள பல்வேறுபட்ட அங்குராப்பன நிகழ்வுகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ கலந்துகொள்ளவுள்ளார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்தையும் வர்த்தக முகாமைத்துவ பீடத்துக்கான கட்டிடத் தொகுதியையும் ஜனாதிபதி திறந்துவைப்பார்.

அத்துடன்  ஒலுவில் வளாகத்திலும் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திலும் மாணவர் விடுதிக்கான அடிக்கல்லையும் நடுவார்.

ஜனாதிபதியுடன் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க, அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும்  உள்ளூர் பிரமுகர்களும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த வைபவங்கள் சம்மந்தமாக உள்ளூர் பத்திரிகையாளர்களை தெளிவுபடுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு, நேற்று தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.எம்.அப்துல் சத்தார், கலை கலாச்சார பீடாதிபதி எம்.அப்துல் ஜப்பார், விரிவுரையாளர் எம்.ஏ.எம்.சமீம், சிரேஷ்ட விரிவுரையாளர் கே.எம்.முபாரக், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.எச்.நபார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment