வெல்லமுல்லிவாய்க்காலில் புத்தாண்டுக் கொண்டாட்டம்!
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெல்லமுல்லிவாய்க்கால் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுக்காக புத்தாண்டுக் கொண்டாட்ட விழா ஒன்றை அண்மையில் இலங்கை இராணுவத்தின் 68 ஆவது படைப் பிரிவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பல்வேறு சம்பிரதாய பூர்வ சமூக விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் சிறுவர்களும் இளைஞர் யுவதிகளும் போட்டிகளில் மிகவும் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். இதன் போது இப்பிராந்தியத்தை சேர்ந்த 3000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படன.இந் நிகழ்வில் இராணுவ உயரதிகாரிகள் மற்றும் பெரும்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment