தெமட்டகொட வீடமைப்புப் பணிகளை பாதுகாப்பு செயலாளர் பார்வையிட்டார்!
குடிசை வாசிகளுக்காக தெமட்டகொட பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் வீடமைப்புத் திட்டங்களை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலளார் கோதாபய ராஜபக்ஷ நேற்று (28) பார்வையிட்டார்.
துரிதமாக நடைபெற்றுவரும் வீடமைப்புப் பணிகள் குறித்து அவர் விசாரித்தறிந்துகொண்டதோடு கட்டிடப் பணிகளில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.
தெமட்டகொட பிரதேசத்தில் வசிக்கும் குடிசை வாசிகளையும் நேரில் சந்தித்த பாதுகாப்புச் செயலாளர் அவர்களுடன் சினேகபூர்வமாக உரையாடினார்.
தெமட்டகொட பிரதேசத்தில் 718 வீடுகளின் நிர்மாணப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இவை அப்பிரதேச குடிசை வாசிகளுக்கு விரைவில் கையளிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment