Tuesday, October 29, 2013

பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி!


பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி!











ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் 23 ஆவது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்
நேற்று (29)  மாலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பாதுகாப்பு பல்கலைக்கழக முகாமைத்துவ சபைத் தலைவரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டார்.

பாதுகாப்புத் துறை பல்வேறு பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்பட்டன.

சகல துறைகளிலும் திறமை காட்டிய பாதுகாப்பு அதிகாரிக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்


No comments:

Post a Comment