கண்டி தலதா மாளிகைக்கு ஜனாதிபதி விஜயம்!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (29) சரித்திரப் பிரசித்தி பெற்ற கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டார்.
சமய வழிபாடுகளுக்காக அங்கு வந்திருந்த பொது மக்களுடன் ஜனாதிபதி சினேகபூர்வமாக உரையாடினார்.
இந்த நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க- பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் வாஸ் குணவர்தன- லொஹான் ரத்வத்த ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment