Tuesday, July 23, 2013

யாழ் மாவட்ட ஊடகவியலாளர் கருத்தரங்கு இன்று!


யாழ் மாவட்ட ஊடகவியலாளர் கருத்தரங்கு இன்று!

-எம்.ஜே.எம். தாஜுதீன்

யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக  அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள ஊடகக் கருத்தரங்கு  இன்று 23 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறுகிறது .



மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்புஎன்ற தலைப்பில் யாழ் மாவட்ட பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறும் இந்த கருத்தரங்கில்-   வட மாகாண ஆளுநர்  மேஜர்  ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி-  பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பிரதம அதிதியகளாக கலந்துக் கொள்கிறார்கள்.

அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல இக்கருத்தரங்கின் நோக்கம் பற்றி சற்று நேரத்துக்கு முன்னர் விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்ட அபிவிருத்திச் செயற்திட்டங்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் உரையாற்றினார்.

தினகரன் பிரதம ஆசிரியர் எஸ்.தில்லைநாதன் - சிரேஷ்ட ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான ஏ.பீ. வைஸ் ஆகியோரும்  இங்கு விரிவுரைகளை நிகழ்த்துவர் என இக்கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளரான பிரதித் தகவல் பணிப்பாளர் ஏ. ஹில்மி முஹம்மத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment