Tuesday, July 23, 2013

நீர்கொழும்பில் யாழ். முஸ்லிம் சமூக ஒன்றுகூடலும் இப்தாரும் -2013


நீர்கொழும்பில் யாழ். முஸ்லிம் சமூக ஒன்றுகூடலும் இப்தாரும் -2013

-எம்.ஜே.எம். தாஜுதீன்

முஸ்லிம் சமுகத்தின் யாழ். பூர்வீக உரிமையை நினைவு படுத்தும் யாழ். முஸ்லிம் சமூக ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்ச்சியும் நாளை 22 ஆம் திகதி நீர்கொழும்பி;ல் நடைபெறும்.

சமூக- கல்வி அபிவிருத்தி அமைப்பு இந்த நிகழ்வை நீர்கொழும்பில் 12 ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்துள்ளது.

பெரியமுல்லை ஜும்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி ஐ.எல்.எம். ஹனீபா தலைமையில் கொழும்பு வீதியில் உள்ள பரகத் திருமண மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு ஒன்றுகூடலும் இப்தாரும் இடம்பெறும்.

இந்த நிகழ்வில் திஹாரி தன்வீர் அகடமி விரிவுரையாளர் மௌலவி எம்.எஸ். அப்துல் முஜீத் (கபூரி) 'முஸ்லிம் சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தும் மாற்றுச் சிந்தனைகள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுவார்.

1 comment: