Monday, July 29, 2013

ஜப்பானிய அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!




ஜப்பானிய  அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

-எம்.ஜே.எம். தாஜுதீன்

ஜப்பானிய உள்விவகார மற்றும் தொடர்பாடல் அமைச்சர் யோஷிதக சிந்தோ இன்று (28) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜனாதிபதி மாளிகையில் இச்சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.

இலங்கைக்கும்  ஜப்பானுக்கும்  இடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை - முக்கியமாக தகவல்தொடர்புத் துறை உட்பட பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

2011 ஆம் ஆண்டு ஜப்பானில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது இலங்கை அரசாங்கம் வழங்கிய ஆதரவுக்கும் உதவிகளுக்கும் ஜப்பானிய அமைச்சர் இலங்கைக்கு நன்றி தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் யாப்பான் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜப்பான் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக இலங்கைக்கு அபிவிருத்தி உதவியாக 57.8 பில்லியன் ரூபாவை வழங்க ஜப்பான் பிரதமர் இணக்கம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பேச்சுவார்த்தையில் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அமைச்சின் செயலாளர் சரித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள்  கலந்துகொண்டனர். (எம்.ரி.-977)

No comments:

Post a Comment