மாபெரும் மலர் மாலை ஜனாதிபதிக்கு அணிவிப்பு!
மத்திய மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குண்டசாலை - திகன கெங்கல்ல விளையாட்டரங்கில் நேற்று (06) பிற்பகல் இடம்பெற்றது.
புதிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான முரளி ரகுநாதன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்டு ஜனாதிபதிக்கு மா பெரும் மலர் மாலை அணிவித்தார்.
பிரதமர் தி.மு. ஜயரத்ன- அமைச்சர்களான பி. தயாரத்ன- நிமல் சிறிபால டி சில்வா- கெஹெலிய ரம்புக்வெல- லக்ஸ்மன் செனவிரத்ன - எஸ்.பி. திஸாநாயக்க- ரோஹி;த்த அபேகுணவர்தன- அப்துல்காதர்- மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment